வரம்பு


மழை வேண்டும்
என வேண்டி நின்றேன்
உடல் நனைந்து
குளிரில் நடுங்கினேன்

வெயில் வேண்டும்
என ஏங்கி நின்றேன்
உடல் வியர்த்து
வெக்கையில் தளர்ந்தேன்

வேண்டியதும்
வரம்பிற்கு மேல்
வேண்டாமென்றாகிறது.

பெருமான் பெருவேல்