மூர்க்கம்


போரில்,
குழந்தைகளை பெண்களை
அவர்களும் கொல்கிறார்கள்
இவர்களும் கொல்கிறார்கள்.

அன்பு
கருணை
புரிதல்
உரிமை
அமைதி
சமரசம்
சமாதானம்
இறையாண்மை
என்பதெல்லாம்
மூர்க்கத்தனங்களுக்கு முன்னால்
மதிப்பின்றி எரிகின்றன.

பெருமான் பெருவேல்