பிறந்த நிலம்


எங்கள் நிலத்தை
எங்களிடமிருந்து பிடுங்கி
எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி
எங்கள் வாழ்வை பாழாக்கி
எங்களை அழிக்காதே
என்கிற வாழ்வாதார குரலை
எங்கள் உழவுச்சமூகங்கள்
எழுப்பும் போதெல்லாம்
என் மனம் வாடுகிறது.

பெருமான் பெருவேல்