நினைவுப்பொதி


மண் மீது
உள்ளங்கால் பதிய நடந்து
வருடங்கள் பல ஆகிவிட்டன.

வீட்டிற்கு வெளியே
காலுறையும் காலணியும்
பாதங்களை எப்போதும்
மூடியிருக்கின்றன.

சின்னஞ்சிறு வயதினிலே
செம்மண் புழுதியிலே
ஓடித் திரிந்த நாட்கள்
ஏனோ
நினைவுப்பொதியில் பறக்கின்றன.

பெருமான் பெருவேல்