காதலைத்தேடி


அறிவுக்கும் காதலுக்கும்
சம்பந்தம் இருப்பதில்லை.

சரி தவறு என்பவை
காதலுக்குத் தெரிவதில்லை.

காதலையும் கடவுளையும்
எளிதில்
புரிந்துகொள்ள முடிவதில்லை.

காதலும் பித்தும்
அகத்திற்குள்
அடங்குவதில்லை.

காதல் என்பது
பகுத்தறிவிற்கு அப்பால் பறக்கும்
மனக்குருவி.

பெருமான் பெருவேல்